தூத்துக்குடியில் வங்கி ஊழியர் மர்ம மரணம்! தந்தை புகார்! போலீஸ் விசாரணை!!

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பிரணவ நந்தேஷ் மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து பைக்கில்  தண்டவாளத்துக்குள் வந்து உள்ளார்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

பின்னர் தண்டவாளத்தின் நடுவில் வேகமாக பைக்கை ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது நிலை தடுமாறி விழுந்த அவருக்கு பலத்த அடிபட்டு உள்ளது. அதேநேரத்தில் அவரது ஆடைகள் கிழந்து சேதம் அடைந்து உள்ளன. அதன்பிறகு அவர் சேதம் அடைந்த தனது மேலாடைகளை கழற்றிவிட்டு அருகே உட்கார்ந்து இருந்த நிலையில் பரிதாபமாக இறந்து இருப்பது தெரியவந்தது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

எதற்காக தண்டவாளத்தில் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார்? தற்கொலை செய்ய முயன்றாரா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பிரணவ நந்தேஷ் மரணத்தில மர்மம் இருப்பதாகவும், அவர் ரயில் மோதி இறந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவரது தந்தை சங்கர நாராயணன் புகார் தெரிவித்துள்ளார்.

புகார் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி ஊழியர் ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts