கோவை நட்சத்திர ஓட்டலில் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் சீனிவாசன் (வயது 36). என்ஜினீயர். இவர் கனடாவில் வேலை பார்த்து வந்தார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஒரு வருடங்களுக்கு முன்பு ேவலையை ராஜினாமா செய்து விட்டு சென்னைக்கு திரும்பினார்.கடந்த சில மாதங்களாக இவர் மிகுந்த மன அழுத்தம் காரணமாக அவதிப்பட்டு வந்தார்.சீனிவாசன் கடந்த 22-ந் தேதி கோவைக்கு வந்து லட்சுமி மில் சிக்னலில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். விரக்தி அடைந்த அவர் கடந்த 25-ந் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வெகு நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் மறுநாள் மற்றொரு சாவி மூலம் அறையை திறந்து பார்த்தனர். அங்கு சீனிவாசன் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் விக்னேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் சீனிவாசன் தங்கி இருந்த அறையை சோதனையிட்ட பொழுது சீனிவாசன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில் எனக்கு கடுமையான மன உளைச்சல் உள்ளது. நான் தனிமையில் தவிக்கிறேன். என்னால் இந்த உலகத்தில் வாழ முடியாது. எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன். இவ்வாறு அதில் எழுதி இருந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-அருண்குமார், கிணத்துக்கடவு.