திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த சின்னக்காம்பாளையம், மைனர் காடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சந்திரகலா, 32, இவர்களின் மகன் வினுதர்ஷன் ,
இவர்கள் தாராபுரம் அருகே தோட்டம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து அதில் விவசாயம் செய்து வருகின்றனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்தத் தோட்டத்தில் விவசாயத்திற்காக தண்ணீர் தேக்கம் உள்ளது. நேற்று மதியம் மின் மோட்டாரை நிறுத்துவதற்காக சென்ற வினுதர்ஷன், எதிர்பாராதவிதமாக தண்ணீர்தேக்கத்தில் விழுந்து மூழ்கினான்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சந்திரகலா, மகனை காப்பாற்ற சென்றபோது, அவரும் தண்ணீரில் மூழ்கினார். நீச்சல் தெரியாததால் இருவரும் தத்தளித்தனர். இதைக் கண்ட சக்திவேல் மற்றும் அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு இருவரும் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் . தாய் மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-அருண்குமார், கிணத்துக்கடவு.