தமிழகத்தில் இனி வரும் காலங்களில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவும், குளிரும் நீடிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வழக்கமாக டிசம்பர் நடுப்பகுதியில்தான் குளிர் அதிகரிக்கும் என்றும், தற்போது கால நிலை மாற்றத்தால், கடல் பகுதியில் இருந்தும், வட துருவத்தில் இருந்தும் வீசும் குளிர் காற்று காரணமாக, அதிகாலையில் குளிர் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தில் தரைப்பகுதியில் இருக்கும் ஈரப்பதம், கடல் பகுதியில் இருந்து வீசும் குளிர் காற்று மற்றும் வடதுருவ காற்று ஆகிய மூன்று சேர்ந்து கடுமையான பனிப்பொழிவு ஏற்படப்போவதாகவும், அந்த கட்டத்தில் எதிரில் வரும் வாகனங்கள் கூட கண்களுக்கு தெரியாததால் வாகனங்களில் செல்வோர் பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த கடும் பனிப்பொழிவு ஜனவரி 15 வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.