குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் வண்ணம் நடைபெற்ற பேக்கத்தான் பேரணி!!

கோவை: குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் வண்ணம் நடைபெற்ற பேக்கத்தான் பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுமக்கள் பின்நோக்கி நடந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தும் வண்ணம் வ.உ.சி பார்க் கேட் பகுதியில் பேக்கத்தான் என்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை யங் இந்தியன்ஸ் என்ற அமைப்பு நடத்தியது. இதில் 8 தனியார் கல்லூரியின் மாணவர்கள், பொதுமக்கள் என சுமார் 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பின்நோக்கி நடந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் யங் இந்தியன்ஸ் அமைப்பின் கோவை கிளை தலைவர் ஸ்ரீகுமார் மற்றும் மாசும் திட்டத்தின் தலைவர் ராஜலஷ்மி விஷ்ணு முன்னிலை வகித்தனர். இந்த பேரணியானது குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்களில் இருந்து பாதுகாப்பு ஏற்படுத்திட வலியுறுத்தி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.குழந்தைகளின் பாதுகாப்பிற்காக இது போன்று பின் நோக்கி பேரணி மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

– சீனி,போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts