கேரளா தமிழ்நாட்டு எல்லையில் காட்டாற்று வெள்ளம் விவசாயிகள் பாதிப்பு..

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் – தமிழ்நாடு கேரளா எல்லையான போடி மெட்டு பகுதியில் போடிநாயக்கனூர் என்ற பகுதியிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள போடி மெட்டு என்ற பகுதியில் தமிழ் மக்கள் வசித்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழை காரணமாக கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் அதிகமான மழை பெய்து வருவதால் மலைப்பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் வெல்லமாக மாறி போடி மெட்டு பகுதியில் உள்ள விவசாயப் பகுதியில் விலைய வைக்கப்பட்டிருந்த ஏலம், மிளகு மற்றும் இலவம்பஞ்சு போன்ற செடிகள்,மரங்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டு விவசாயிகளின் விளைச்சலை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. அங்கு நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஜான்சன்.மூணார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts