பொள்ளாச்சியில் வருகின்ற 27ஆம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!!

பொள்ளாச்சி கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும்
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து வருகின்ற 27 ஆம் தேதி பொள்ளாச்சியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கோவையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் முன்னிலை வகித்தார் மற்றும் மாவட்ட கலெக்டர் சமீரன், போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் இவர்களுடன் சில முக்கிய
அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் கணேசன் பேசுகையில் பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

மேலும் தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 11 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களை (ஐ.டி.ஐ) சேர்த்து 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. 50 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடியாக ஆய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது.

அதே சமயம் வெளிநாடுகளை போல ஆட்டோமிசின், ரோபோடிக் பயிற்சிகள் வழங்கும் நவீனமான தொழிற்பயிற்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts