தமிழகத்தில் நாளை தொடங்கவுள்ள வாக்காளர் சிறப்பு முகாமில் 17 வயது இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு தேர்தல் ஆணையர் அறிவிப்பு, Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ இந்த முறை 17 வயது இளைஞர்கள் இளம்பெண்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு 18 வயதானதும் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.
மேலும் புதிய வாக்காளர்கள் மற்றும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஏதுவாக
நவம்பர் 12, 13, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள்) சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெற உள்ளது.
மற்ற நாட்களில் தாசில்தார் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் உரிய படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம் அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் பணி கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் தேதியிலிருந்து தொடங்கியது.
இப்பணி அடுத்த வருடம் மார்ச் 31-ம் தேதி வரை நடக்க உள்ளது. ஓட்டுச்சாவடி அலுவலரிடம் ஆதார் எண் வழங்க முடியாதவர்கள் https://www.nvsp.in என்ற இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்யலாம். இது தவிர ‘Voter Help Line’ என்ற செயலி மூலமாகவும் ஆதார் எண்ணை பதிவேற்றலாம் என்று அறிவித்துள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக
-ச.கலையரசன்.மகுடஞ்சாவடி.