தமிழக அரசின் கலைத்திருவிழாவில் மாநில அளவில் டிஜிட்டல் ஆர்ட் போட்டியில் பொள்ளாச்சி நகராட்சி பள்ளி மாணவர் முதலிடம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் டிஜிட்டல் ஆர்ட் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலைத் திருவிழா போட்டிகள் வெகு சிறப்பாக நடத்தப்பட்டன .

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

அதில் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் முஹம்மது அர்ஜான் என்பவர் டிஜிட்டல் ஆர்ட் போட்டியில் ஒன்றிய மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்றார்.

இதைத்தொடர்ந்து இந்த மாணவர் கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று முதல் இடத்தை பெற்றார். வெற்றி பெற்ற இந்த பத்தாம் வகுப்பு மாணவருக்கு பல்வேறு அமைப்புகள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் கலையரசன் என்கிற பட்டமும் வழங்கி வெளிநாடுகளுக்கு விளையாட்டுகளில் பங்கேற்கவும்,அரசு சுற்றுலா செல்லவும் உள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்தார் .

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

வெற்றி பெற்ற பள்ளி மாணவரை பள்ளி தலைமை ஆசிரியர் முருகேஷ் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் வேல்விழி பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் வெள்ளை நடராஜ்.உடற்கல்வி ஆசிரியர் புனிதன் வகுப்பாசிரியர் ராஜேஸ்வரி உள்ளிட்ட ஆசிரியர்கள் பொன்னாடை போர்த்தியும் நினைவு பரிசு வழங்கியுயும் பாராட்டு தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts