மாணவி பாலியல் பலாத்காரம் வளர்ப்பு தந்தை கைது!!

மாணவி பாலியல்

 மாணவி பாலியல் பலாத்காரம் வளர்ப்பு தந்தை கைது!!

கோவையை சேர்ந்த 13 வயது மாணவி -7 ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவியின் தந்தை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இதனால், சிறுமியின் தாய் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விமல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மாணவியின் தாய் வேலைக்கு செல்லும் நேரத்தில் அந்த மாணவியை வளர்ப்புத் தந்தையான விமல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன் காரணமாக, மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அவரது தாய் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதனை செய்த போது, மாணவி 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இது பற்றி விசாரித்த போது மாணவியை வளர்ப்புத் தந்தையான விமல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இது குறித்து மாணவியின்  தாய் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வளர்ப்பு தந்தை விமலை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts