வேலை இல்லாமல் இருக்கிங்களா… இப்பவே apply பண்ணுங்க! தூத்துக்குடியில் மார்ச் 4இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!!

வேலை இல்லாமல்

வேலை இல்லாமல்

வேலை இல்லாமல் இருக்கிங்களா… இப்பவே apply பண்ணுங்க! தூத்துக்குடியில் மார்ச் 4இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வருகின்ற 04.03.2023 அன்று நடைபெற உள்ள தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் வேலை நாடுநர்களுக்கான இணையவழி பதிவினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.

முகாமில் அவர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் 04.03.2023 அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

முகாமில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து 200 நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. இம்முகாம் 10,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் முகாமாக இருக்கும். முகாமில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களின் இணையதளத்தில் பதிவு செய்து ஒப்புகைசீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வேலைவாய்ப்பற்ற பலருக்கு இம்முகாம் மிகப்பெரும் வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ்குமார், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ் குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பேச்சியம்மாள், தேசிய தகவலியல் மைய அலுவலர் சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

ஶ்ரீவைகுண்டம் நிருபர்
-முத்தரசு கோபி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts