இப்தார் நொன்பு திறக்கும் நிகழ்ச்சி கோவை போத்தனூர் பகுதியில் நடைபெற்றது!!

இப்தார் நொன்பு

NALAIYA VARLARU

இப்தார் நொன்பு திறக்கும் நிகழ்ச்சி கோவை போத்தனூர் பகுதியில் நடைபெற்றது!!

கோவை குறிச்சிப்பிரிவு வியாபாரிகள் நல சங்கம் சார்பில் இப்தார் நொன்பு திறக்கும் நிகழ்ச்சி கோவை போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியானது, அச்சங்கத்தின் தலைவர் கிதர்முகம்மது தலைமையில் நடைபெற்றது,
இதில், துணைத்தலைவர்கள் முஹம்மது இலியாஸ், அப்துல் காதர், முன்னிலை வகித்தனர். செயலாளர் காதர் மைதீன் வரவேற்புரையாற்றினார். இணை செயலாளர் செல்லப்பா, துணைச்செயலாளர் இப்றாகீம், ஆகியோர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இப்தார் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை மாநகர் மாவட்ட துணைச்செயலாளர் கோட்டை அப்பாஸ், கோவை மாநகராட்சியின் துணை மேயர் வெற்றிச்செல்வன், காவல் உதவி ஆணையாளர் சதீஸ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் எஸ்ஏ காதர், அஹ்மத் கபீர், மற்றும் நிர்வாகிகள் ஹாஜி இனாயத்துல்லாஹ், சுமையர் பாவா, என பலரும் கலந்து கொண்டனர்.

இதில் சுமார் 1000த்திற்க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு, துவா நடத்தி நோன்பு துறந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts