வீரன் சுந்தரலிங்கனார் 253வது பிறந்த நாளை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு!!!

வீரன் சுந்தரலிங்கனார்

NALAIYA VARALARU

வீரன் சுந்தரலிங்கனார் 253வது பிறந்த நாளை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு!!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே கவர்னர்கிரியில் நாளை வீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள் விழா அரசு சார்பில் நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் கவர்னகிரியில் வரும் 16.04.2023 அன்று நடைபெற உள்ள வீரன் சுந்தரலிங்கனாரின் 253வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று (14.04.2023) திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பிரவேஷ் குமார் இ.கா.ப அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் கவர்னகிரியில் உள்ள வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த ஆய்வின்போது மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. லோகேஸ்வரன், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்துராமன், பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுதேசன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

ஒட்டப்பிடாரம் நிருபர்

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts