ஷெக்கினா தொடக்கப்பள்ளி 7ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது!!

ஷெக்கினா

NALAIYA VARALARU

ஷெக்கினா தொடக்கப்பள்ளி 7ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதி மணியாச்சி ஷெக்கினா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் 7ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பள்ளியில் 150 க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த ஆண்டு மத்திய அரசு 7, 8 வது வகுப்புகள் தொடங்க அனுமதி வழங்கி உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்ச்சியில் ஆடல் பாடல்கள் மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் செல்போன் பற்றிய நன்மை,தீமைகள் , குறித்து எடுத்துக் கூறினார். பின்னர் மாணவ மாணவிகளுக்கு ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் மற்றும் மணியாச்சி போலிஸ் துணை சூப்பிரண்டு லோகஸ்வரன் அவர்கள், தூய சவேரியார் கல்லூரி முதல்வர் அருள் ரவி அவர்கள் சிறைப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார்கள்.

 

பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மணியாச்சி பஞ்சாயத்து தலைவர் பிரமா முருகன், அக்காநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் அய்யாத்துரை , சவலாப்பேரி பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை மற்றும் கொடியங்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார் , பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டார் .

நாளைய வரலாறு செய்திகளுக்காக

ஒட்டப்பிடாரம் நிருபர்

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts