வேலூர் சரக காவலர் குறை தீர்வு கூட்டம் காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது!!

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவலர் குறைதீர்க்கும் கூட்டம் 09-06- 2023 வெள்ளி அன்று வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர். M.S.முத்துசாமி இ.க.பா., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த குறை தீர்ப்பு முகாமில் சுமார் 99 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்கள் அவர்களது கோரிக்கைகளை மனுக்களாக வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்களிடம் வழங்கினார்கள்.

இந்த காவலர் குறை தீர்ப்பு கூட்டத்தில் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் உடன் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உடன் இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts