போலியாக பில் போட்டு குடோனில் இருந்த பொருட்களை விற்பனை செய்த ஊழியர்கள்!! உரிமையாளர் காவல்துறையில் புகார்!!!

போலியாக பில்

போலியாக பில் போட்டு குடோனில் இருந்த பொருட்களை விற்பனை செய்த ஊழியர்கள்!! உரிமையாளர் காவல்துறையில் புகார்!!!

கோவை ராம்நகர் சரோஜினி வீதி பகுதியை சேர்ந்தவர் ஹைதர் என்பவரின் மகன் மனைவி 46 வயதான ரஷிதா. இவரும் அவரது நண்பரும் சேர்ந்து கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் பவர் டூல்ஸ் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

இதற்கான குடோன் சுந்தராபுரம் மதுக்கரை ரோடு பகுதியில் அமைந்துள்ளது. இவர்களுக்கு சொந்தமான மூன்று கடைகள் கோவை நஞ்சப்பா ரோடு பகுதியில் அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக குடோனில் இருப்பில் உள்ள உதிரி பாகங்களுக்கும் கடையில் உள்ள உதிரி பாகங்களின் பட்டியலுக்கும் நிறைய வித்தியாசம் இருந்து வந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த சமயத்தில் நிறுவனத்தில் வேலை பார்த்த நந்தினி மற்றும் சிராஜ் ஆகியோர் வேலையில் இருந்து நின்று வேறு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தனர். தொடர்ந்து குடோனில் இருந்த பொருள்கள் கணக்கு குறைவாக இருந்ததால் ரஷிதா ஏற்கனவே வேலை செய்த ஊழியர்கள் நந்தினி மற்றும் சிராஜ் ஆகியோரை அழைத்துள்ளார். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் போலி ஆவணங்கள் மூலம் குடோனில் இருந்த பொருள்களை மற்றும் உதிரிபாகங்களை எடுத்து வேறு நிறுவனத்திற்கு விற்றது தெரிய வந்தது.

இதன் மூலம் சுமார் 25 லட்ச ரூபாய் வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து ரஷிதா போத்தனூர் காவல்நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வாங்கிய பாத்திமா, ரோசட் பொருட்களை விற்ற நந்தினி, சிராஜ் , ஜாகீர் ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts