கோவை அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் கருமத்தம்பட்டி, வடுகபாளையம் பிரிவு அருகே
ராமசாமி என்பவரது இடத்தில் நேற்று ராட்சத பேனர்கள் வைக்கும் வேலை சேலத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தலைமையில் 7 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் பழைய விளம்பர பேனரை அகற்றிவிட்டு புதிய
விளம்பர பேனரை பொருத்திக் கொண்டிருந்த பொழுது வீசிய காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் விளம்பர பேனர் பொருத்தவிருந்த இரும்பு சாரம் சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த விபத்தில் குமார், குணசேகரன், சேகர் என்ற 3 தொழிலாளர்கள் சாரத்தின் அடியே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை ஒப்பந்ததாரர் பழனிச்சாமியை கைது செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்ட நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி சுப ஸ்ரீயை நினைவு படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.