தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம்!!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிக்கை: தூத்துக்குடி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் நிலையில் ‘அ’ பிரிவு கிராமத்தில் பணிபுரிந்து வரும் கிராம நிர்வாக அலுவலர்களில் ஓராண்டு பணி முடித்தவர்களுக்கும், ‘ஆ’ பிரிவு கிராமத்தில் மூன்றாண்டு பணி முடித்தவர்களுக்கும்;

பார்வை 1-ல் காணும் அரசாணையில் குறிப்பிடப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றியும், தொடர்புடைய ஆவணங்களைப் பரிசீலனை செய்தும் ‘அ’ மற்றும் ‘ஆ’ பிரிவு கிராமங்களின் கிராம நிர்வாக அலுவலர்களின் முதுநிலைப் பட்டியல் தயார் செய்து 30.06.2023 அன்று கிராம நிர்வாக அலுவலர்களிடையே கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

கலந்தாய்வின் முடிவின் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கீழ்க்கண்டவாறு பொது இடமாறுதல் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

2) மேற்கண்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பணிமாறுதல் செய்யப்பட்ட கிராமத்தில் 01.07.2023 அன்று பணியேற்க உத்தரவிடப்படுகிறது.

3) இந்த ஆணையின் மீது எவ்வித மேல்முறையீடு மற்றும் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. தனியர்கள் பணியேற்ற விபரத்திற்கு உடனறிக்கை செய்திட தூத்துக்குடி வட்டாட்சியர் கேட்டுக் கொள்ளப்படுகிறார். இவ்வாறு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts