ஒட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில், தங்கள் குடி நீர் குடிக்க உகந்ததா என்பதை அறிய பயிற்சி!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் கிராம குடிநீர் மற்றும் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் இரண்டாவது நாளாக நடைபெற்றது. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 61 பஞ்சாயத்துகளில் நேற்று 31 பஞ்சாயத்துகளுக்கு நடைபெற்றது மீதமுள்ள 30 பஞ்சாயத்துகளுக்கு இன்று காலை பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் துவங்கி வைத்தார்.

நாம் குடிக்கும் குடிநீர் குடிப்பதற்கு முன் தங்கள் குடிக்கும் நீர் குடிக்க உகந்ததா என பரிசோதித்து குடிக்குமாறு பஞ்சாயத்து கிராம உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு ஜல்ஜீவன் மிஷின் சார்பில் களநீர் பரிசோதனைக் கருவியைப் பயன்படுத்தி குடிநீர் மற்றும் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கான குடிநீர்த் தேவை பற்றி மழைநீர் சேமிப்பு பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. தண்ணீரில் எவ்வளவு உப்பு குளோரைடு இரும்பு சத்து இருக்க வேண்டும் என சோதனை செய்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தண்ணீரின் தரம், தண்ணீர் பகுப்பாய்வு, தண்ணீர் பாதுகாப்பு ,தண்ணீர் சேகரிப்பு, மழைநீர் சேகரிப்பு ,சுத்தமான குடிநீர் மற்றும் வேதியியல் பாக்டீரியாக்கள் சம்பந்தப்பட்ட இரசாயனங்களை எவ்வாறு கண்டறிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேற்பார்வை பொறியாளர் கோபால் அவர்கள் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்ட நிர்வாக பொறியாளர் ராஜா அவர்கள் தலைமை தாங்கினார் உதவி நிர்வாகப் பொறியாளர் ஜான் செல்வன் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் வெங்கடேசன், விமல், பூர்ணிமா, முத்து லட்சுமி, விஜய், முகுந்தன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இந்த நிகழ்ச்சியை லா தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts