மருதமலை அருகே கல்வீரம்பாளையம் பகுதியில் காட்டு யானை புகுந்ததால் பரபரப்பு!!!

கோவை மாவட்டம் மருதமலை பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மருதமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று மனிதர்கள் அதிகமாக வசிக்கும் கல்வீரம்பாளையம் பகுதியில் ஊருக்குள் புகுந்தது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

யானை ஊருக்குள் வந்ததை அடுத்து, வனத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை அடர் வனப்பகுதி விரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

மேலும் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் ஒலிபெருக்கி வாயிலாக எச்சரிக்கை விடுத்தனர். அதன்பின்னர் யானையை அடர் வனப்பகுதியான மேற்கு தொடர்ச்சி அடிவார பகுதிக்கு, விரட்டினர். இதனால் அந்தப் பகுதி சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts