தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் வேப்பலோடை கிராமத்தில் அரசு மாதிரி மேல்நிலையில் மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் அவர்கள் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
இந்த கிராமத்தில் என்னிடம் குளத்தில் பாலம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வேலிக்கருவை இல்லாத தொகுதியாக மாற்றுவது என்னுடைய லட்சியம், மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு மரக்கன்று வளர்த்து நாம் தொகுதியை பசுமையான தொகுதியாக மாற்ற மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மாணவர்களின் முதன்மை மாணவன் கடைசி மாணவன் என யாரும் இல்லை எல்லோருக்கும் திறமை உண்டு எல்லோருக்கும் எதிர்காலம் உண்டு நன்றாக படித்து இந்த பள்ளிக்கு பெருமை சேர்க்கக் வேண்டும் என கேட்டுக்கொள்கிறன் பேசினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்வில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஒன்றிய குழு துணைத்தலைவர் காசிவிஸ்வநாதன் அவர்கள், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் ரமேஷ் அவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மிக்கேல் நவமணி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கல்மேடுராஜ், சுமதி இம்மானுவேல் மாவட்ட பிரதிநிதி தளவைராஜா ஒன்றிய
இளைஞரணி துணை அமைப்பாளர் தங்கச்சாமி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய சமூக வலைதள அணி அமைப்பாளர் முத்துராஜ் கிளை செயலாளர்கள் மாரியப்பன், திருமணிராஜா கிளை பிரதிநிதிகள் தங்கராஜா, வேல்ராஜா, உவரிராஜா, வேலுச்சாமி, கண்ணையா, கல்மேடு முருகன் உட்பட ஆசிரிய – ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.