காருக்குள் பதுங்கி இருந்த கொம்பேரி மூக்கன் பாம்பு!! பாதுகாப்பாக பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டது!!!

கோவையில் இன்று பாப்பநாயக்கன் பாளையம் பகுதி சேர்ந்த ஒருவர் தனது காரை சாலையில் ஓட்டிச் சென்று இருக்கின்றார். சாலையில் கார் பயணித்துக் கொண்டிருந்த பொழுது, மழை நீர் வடிக்கும் வைப்பர் மீது பாம்பு ஒன்று எட்டிப் பார்த்திருக்கின்றது. உடனே இதைப் பார்த்த அந்த காரின் உரிமையாளர்,காரை சிங்காநல்லூரில் உள்ள ஷோரூம் ஒன்றுக்கு ஓட்டிச் சென்று இருக்கின்றார்.

ஷோரூமில் இருந்து பாம்பு பிடி வீரருக்கு தகவல் தரப்பட்டது. வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பைச் சார்ந்த பாம்பு பிடி வீரரும் , வழக்கறிஞருமான சித்ரன் விரைந்து வந்துள்ளார். பின்னர் பைபர் பகுதியில் பதுங்கியிருந்த பாம்பை மீட்க கார் பேனட்டை லாவகமாக திறந்து பாம்பை பார்த்தனர். அப்போது வைபர் கீழ் பகுதியில் பாம்பு பதுங்கியிருந்ததனை சித்ரன் பத்திரமாக பிடித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அந்த பாம்பு கொம்பேரி மூக்கன் பாம்பு. பிடிக்கப்பட்ட பாம்பை பாம்பு பிடி வீரர் பாட்டிலில் அடைத்தார். அந்த பாம்பினை வனத்துறையிடம் பாதுகாப்பாக ஒப்ப்படைக்கப்பட்ட நிலையில், வனபகுதியில் விடவிருக்கின்றனர். இதன் பின்னரே கார் உரிமையாளர் நிம்மதி பெருமூச்சு விட்டு இருக்கிறார். அதேபோன்று இரு சக்கர வாகனங்களுக்குள்ளும் சில சமயங்களில் பாம்புகள் புகுந்து விடுவதுண்டு எனவே வாகனங்களை தகுந்த பாதுகாப்பான இடங்களில் நிறுத்த வேண்டும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts