கோவில்பட்டியில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கழுதைக்கு மனு கொடுக்கும் போராட்டம்!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வருவாய் அலுவலகம் முன்பு இன்று காலை 10 மணி அளவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கழுதைக்கு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இளையரசனேந்தல் கிராமத்தில் குடியிருக்கும் இடம் இல்லாத ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பலமுறை தாசில்தாரிடம் மனு கொடுத்தும் பயனில்லாததால் பலகட்ட போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தியும் அதிகாரிகள் செவி சாய்க்காததால் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்து முறையீடு செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் விசாரணை செய்து தகுதியான நபர்களை தேர்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை யாருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

எனவே அதிகாரியிடம் மனு கொடுத்து எந்த பிரயோஜனமும் இல்லாததால் கழுதைக்கு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் கழுதை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த ஆர்பாட்டத்தில் பாபு தாலுகா செயலாளர்களும், இன்னாசி முத்து கிளைச் செயலாளர் , ரங்கநாதன் நகரச் செயலாளர் ,கரும்பன் மாவட்ட செயலாளர்களும், சேதுராமலிங்கம் நிர்வாக குழுமம், சரோஜா நகர செயலாளர் ,பரமராஜ் மாவட்ட குழு ராமகிருஷ்ணன் தாலுகா உதவி செயலாளர் துணை செயலாளர் சுரேஷ்குமார் தாலுகா செயலாளர் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts