பொதுவெளியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்!! கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு தினமும் ஆயிரகணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வளவு முக்கியமான சுற்றுலா தளமாக விளங்கி வரும் வால்பாறையில் சிலர் செய்யும் மோசமான செயல்பாடுகளால் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வால்பாறை ஸ்டேன்மோர் பகுதி அருகில் அதாவது வால்பாறை படகு இல்லம் அடுத்து உள்ள வளைவில் மருத்துவ கழிவுகளை பொதுவெளியில் கொட்டி விட்டு சென்றுள்ளனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஆகி உள்ளது.

மேலும் இந்த பகுதிக்கு மேய்ச்சலுக்காக வரும் ஆடு மாடுகள் மற்றும் சிங்கவால் குரங்குகள் இதனால் மிகவும் பாதிப்படைகின்றன. இந்த பகுதியில் வாகன ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி சுத்தம் செய்து கொண்டும் வந்துள்ளனர்.

இது போன்று மக்கள் பயன்பாட்டிற்கு உள்ள பகுதிகளில் குப்பைக் கழிவுகளையும் மருத்துவக் கழிவுகளையும் கொட்டுவது என்பது மிகவும் வருத்தத்திற்குரிய செயலாகும். எனவே இது போன்று செயல்களில் ஈடுபடும் நபர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களின் வேண்டுகோளாக உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts