ஆண்களுக்கான தர்பியா வகுப்பு சிறப்பாக நடைபெற்றது!!

கோவை செல்வபுரம் மஸ்ஜிதுர் ரஹீம் & மதரஸத்துல் இஹ்லாசின் சார்பாக ஆண்களுக்கு மட்டும் (நல்லொழுக்க பயிற்ச்சி)தர்பியா இன்றுகாலை 6 மணிமுதல் 8 மணிவரை அன்றைய ஆட்சியாளர்களும் இன்றைய ஆட்சியாளர்களும் என்ற தலைப்பில் வகுப்பு நடைபெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கமாக மாணவன் ஆசிப் திருமறை வசனம் ஓதி துவக்கிவைத்தார் மௌலவி யூனுஸ் பிர்தௌசி அவர்கள் (அன்றைய ஆட்சியாளர்களும் இன்றைய ஆட்சியாளர்களும்)
என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார். நிகழ்ச்சி முடிவாக செயலாளர் செக்கீர் நன்றியுரை கூறி நிறைவு செய்தார்.

இந்நிகழ்வில் பள்ளி நிர்வாகிகளும் மதரஸா மாணவர்களும் பொதுமக்களும் கலந்து
பயனுள்ள நிகழ்வாக இருந்தது என வாழ்த்து கூறி விடைபெற்றனர். நிகழ்ச்சியை பள்ளி நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தனர்!!!

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts