கோவில்பட்டியில் மதுரை மாநாடு குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் மதுரையில் வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் நடைபெற இருக்கிறது, மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் நேற்று காலையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரையில் வருகின்ற ஆகஸ்ட்-20 அன்று நடைபெற உள்ள அஇஅதிமுக வீரவரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு-2023 க்கான தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் செய்ய வேண்டிய ஆயத்தபணிகள் குறித்தும் ஏற்பாடுகள் குறித்தும் வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் கழக அமைப்பு செயலாளர்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர், கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற எதிர்கட்சி பொருளாளர் கடம்பூர்.செ.இராஜூ அவர்கள் தலைமையில் கோவில்பட்டியில் வைத்து இன்று நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் P.மோகன் B.Sc., Ex.MLA அவர்கள் கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளான கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் உயர்திரு.லட்சுமணபெருமாள் அவர்கள், தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் சார்பில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் N.G.இராஜேந்திரன் அவர்கள் ஆகியோர் மாநாடு செல்வதற்கான ஏற்பாடு பணிகள் குறித்த கருத்துக்களை மாவட்ட கழக செயலாளர் அவர்களிடம் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம். 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts