வறட்சியின் உச்ச நிலை சுற்றுலா துறைக்கு பாதிப்பு !!!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தளமான மூணார் பகுதியில் வருடத்திற்கு மூன்று முறை சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து காணப்படும் ஒன்று தென்மேற்கு பருவமழை காலங்களில் இரண்டாவது டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி குளிர் காலங்களில் மூன்றாவது விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகள் அதிகரித்து இருப்பது வழக்கம். ஆனால் இந்த வருடத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கிய காலகட்டத்தில் மழை சற்று அதிகமாக காணப்பட்டாலும் தற்பொழுது மழையின் அளவு மிகவும் குறைந்து உள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது நீர் நிலைகளையும் இயற்கைகளையும் கண்டு களிக்க வரும் இயற்கை விரும்பிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் வண்ணமாக ஆறுகளிலும் நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் இல்லாத சூழ்நிலையும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதாலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது

இது சுற்றுலா துறைக்கு ஒரு பேரிழப்பாக கருதப்படுகிறது. மட்டுமல்ல அது சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகளை நம்பி வாழ்வாதாரத்தை அமைத்திருக்கும் மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதிலிருந்து மக்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும் இயற்கையை அழித்து வளர்ச்சியை மட்டுமே மேம்போக்காக பார்த்தால் மீண்டும் நாம் எதிர்பார்க்கும் இயற்கை நம்மிடம் இருக்காது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் எனவே இயற்கையை பாதுகாக்க அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts