வால்பாறையில் தேயிலை தோட்டத் தொழிலாளியை தாக்கிய கரடி..??

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள வாட்டர் பால்ஸ் தேயிலை தோட்டம். அங்கு தொழிலாளியாக பணியாற்றுபவர் கமலம் வயது 59 .அவர் வழக்கம்போல் தேயிலை காட்டில் கொழுந்து பறிக்க சென்று கொண்டிருந்தார். அப்பொழுது தேயிலை செடியில் மறைந்திருந்த கரடி ஒன்று அவரை தாக்கியது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உடன் வந்தவர்கள் ஓடி வரவே கரடி அவரை விட்டு விட்டு தப்பி ஓடியது. இதில் பலத்த காயமடைந்த கமலத்திற்கு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு தீவிர மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனைமலை புலிகள் காப்பக உதவி கள இயக்குனர் மற்றும் உதவி வன பாதுகாவலர் செல்வன் மற்றும் வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ் மருத்துவமனைச் சென்று காயம் அடைந்த கமலத்தை பார்த்து ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து புலிகள் காப்பக நிவாரண நிதியாக ரூபாய் 10,000 கமலத்திற்கு வழங்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-அலாவுதீன், ஆனைமலை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts