புதூர் அருகே லட்சுமிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு.!!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதூர் ஊராட்சி ஒன்றியம், லட்சுமிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.28.35-லட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறை கட்டிடங்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார் வெங்கடாசலம் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி ஒன்றிய குழு உறுப்பினர்கள் பெருமாள்சாமி, சுமதிஇம்மானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை தலைவர் சென்றாய பெருமாள் கிளைச் செயலாளர் முத்துப்பாண்டி உட்பட கழக நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக விளாத்திகுளம் நிருபர்,

-பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts