ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்!!


தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பகுதியில் நிலத்தடி நீரை விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளாரம், ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தண்ணீர் லாரிகள் மூலம் தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்படுவதை தடுத்து நிறுத்த கோரியும்,

ஓட்டப்பிடாரம் தாலுகா சுற்றுவட்டார பகுதிகளில் முறையான அனுமதி இன்றி விவசாய நிலங்களிலும் அரசு புறம்போக்கு இடங்களிலும் அத்துமீறி மின்கம்பங்களை நட்டி வரும் தனியார் காற்றாலை நிறுவனங்களை தடுத்து நிறுத்தி விவசாயத்தை பாதுகாத்திட கோரியும்,

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

100 நாள் வேலை திட்டத்தில் ஊதியத்தை பாக்கி இல்லாமல் உடனடியாக வழங்கக்கோரியும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டார செயலாளர் செல்வராஜ், மாவட்ட தலைவர் ராகவன், மாவட்ட செயலாளர் புவிராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சண்முகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

– முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts