மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தவிப்பு!!
கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்தும் கிடைக்காமல் தவிக்கிறார்கள் இது தொடர்பாக எஸ்டேட்டில் வேலை செய்யும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூறுகையில் நாங்கள் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்கிறோம். எங்களுக்கு சொந்த வீடு கிடையாது எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
இந்த நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மகளிர்க்காக வாழ்வாதாரம் உயர வேண்டும் மகளிர் கையிலும் உரிமைத் தொகை இருக்க வேண்டும் என்ற சிந்தனையில்
மகளிர் காண உரிமைத்தொகை தமிழக முழுவதும் ஆரம்பித்தார் நாங்களும் அதை விண்ணப்பித்தோம். ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை எங்களுக்கு உரிமை தொகை கிடைக்கவில்லை எங்களுக்கும் உரிமைத் தொகை கிடைப்பதற்காக எஸ்டேட்டிலிருந்து வேலைக்கு போகாமல் ஊதியத்தை இழந்து வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தோம்.
இங்கும் ஒரே கூட்டம் நெட்வொர்க்கும் வேலை செய்யவில்லை இதனால் எங்களுக்கு நேரம் பண விரயமும் ஏற்படுகிறது அதிகாரிகளும் சிரமத்துக்கு உள்ளாக்கிறார்கள்
இதை கருத்தில் கொண்டாவது தமிழக அரசு எங்களுக்கும் எளிதில் உரிமை தொகை கிடைப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
எஸ்டேட் பகுதியில் நகர மன்ற உறுப்பினர்கள் இல்லை தற்பொழுது வால்பாறை உள்ள 21 வார்டுகளுக்கும் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளனர் இவர்களாவது இது தொடர்புடைய அதிகாரியிடம் ஆலோசித்து ஒரு நாளைக்கு ஒரு வார்டு வீதம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வரவழைத்து மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பித்திருந்த விண்ணப்பித்தில் உள்ள குறைகளை சரி செய்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று எங்களுக்கு உரிமை தொகை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் என்றனர்.
உரிமை தொகைக்காக போராடும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு உரிமைத் தொகையைப் பெற்றுத் தர அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.
-P.பரமசிவம் வால்பாறை.