உலக பார்வை தினத்தை முன்னிட்டு கோவையில் ஆப்தோமெட்ரிக் தமிழ் நண்பர்கள் சங்கம் சார்பாக வாக்கத்தான் நடைபெற்றது.

உலக பார்வை தினம் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக “பணிபுரியும் போதும் உங்கள் கண்களை நேசியுங்கள்” என்ற தலைப்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.. இதன் ஒரு பகுதியாக “ஆப்டோமெட்ரிக் தமிழ் நண்பர்கள் சங்கம்” சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.. “பணிபுரியும் போதும் உங்கள் கண்களை நேசியுங்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த வாக்கத்தான் நடைபயணத்தை, கோவை மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் மற்றும் லோட்டஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் மதுசுதன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ரேஸ்கோர்ஸ் பகுதியில் 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த வாக்கத்தான் நடைபயணம் நடைபெற்றது…இதில்,பணியிடத்தில் பார்வையைப் பாதுகாப்பது, ஆரோக்கியமான கண்களைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த வாக்கத்தான் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் ஆப்டோமெட்ரிக் அமைப்பின் நிர்வாகிகள், குமரன், ப்ரீதா ராம்பிரசாத், சாமுவேல் விஜய், அருள் உட்பட செவிலியர்கள்,கல்லூரி மாணவ,மாணவியர்,பொதுமக்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts