பாலியல் பலாத்காரம் வசமாக மாட்டிகொண்ட ஆட்டோ ஓட்டுனர்??

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து மாட்டிகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. நடந்தது என்ன ?? 17 வயது சிறுமி வழக்கம் போல் பள்ளி சென்றுள்ளார். அங்கே அவருக்கு தீவிரமான வயிறு வழி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே ஒரு அதிர்ச்சி கத்துக்கொண்டிருந்தது . மாணவி கர்ப்பம் அடைந்தது தெரியவந்தது மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சிறுமியிடம் விசாரிக்க நடையார் எஸ்டேட்டை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மூணார் டவுனில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.


தன்னை அவர் ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூற உடனடியாக மூணார் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் மூணார் காவல்துறை உடனடியாக விசாரணை மேற்கொண்டு மணிகண்டன் என்ற நபரை கைது செய்தனர். உடனடியாக தேவிகுளம் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து குற்றவாளியை சிறையில் அடைத்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன். மூணாறு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts