உள்ளாட்சி தினத்தையொட்டி ஜம்புலிங்கபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது!!

ஒட்டப்பிடாரம்: உள்ளாட்சி தினத்தையொட்டி ஜம்புலிங்கபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் அவர்கள் பங்கேற்பு.!!!!

தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது .

அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் ஜம்புலிங்கபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் அவர்கள் கலந்து கொண்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இக்கூட்டத்தில் கிராம சபைக் கூட்டங்களின் எண்ணிக்கையை 4ல் இருந்து 6 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள் ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மகளிர் சுய உதவி குழுக்களை கௌரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதிய மணல் முட்டைகள் தயார் நிலையில் வைத்தால் , இணைய வழி வீட்டு வரி, சொத்து வரி செலுத்துதல் மற்றம் இதர பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஜம்புலிங்கபுரம் ஊராட்சியில் சிறந்த முறையில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து யூனியன் சேர்மன் ரமேஷ் அவர்கள் கௌரவப்படுத்தினார்.

இந்த கிராம சபை கூட்டத்தில் யூனியன் ஆணையாளர் சிவபாலன் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா சுகாதார ஆய்வாளர் திரு.சண்முகவேல் பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன் ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி ஊராட்சி செயலர் பப்பி அங்கன்வாடி பணியாளர்கள் உமா மகேஸ்வரி சைலா கிளைச் செயலாளர் பலவேசம் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

ஓட்டப்பிடாரம் நிருபர்

முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts