கோவை ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் நடைபெற்ற 5வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் 940 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்…

கோவையை அடுத்த கோவைப்புதுர் பகுதியில் உள்ள ஶ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் 5வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஶ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மலர்விழி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஶ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் அறங்காவலர் ஆதித்யா,தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரராமன், கல்லூரியின் முதல்வர் பழனியம்மாள் முன்னிலை வகித்தனர்.இதில் சிறப்பு விருந்தினராக ஜோஹோ ஸ்கூல் லியர்நிங் தலைவர் ராஜேந்திரன் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.

இதில் 2 தங்க பதக்கங்கள், 31 பல்கலைகழக தர வரிசைகள்,9.முனைவர் பட்டம் உட்பட 940 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பேசிய கல்லூரி முதல்வர் இங்கு பயிலும் மாணவர்கள் தொழில் வல்லுனர்களாக வடிவமைக்க பங்காற்றிய ஆசிரிய உறுப்பினர்களுக்கும் நிர்வாகத்திற்கும், பெற்றோர்கள் நன்றியை தெரிவித்தனர். மேலும் அந்தந்த துறைகளில் மாணவர்களை தொழில் வல்லுனர்களாகவும்,தொழில் முனைவராகவும் மாற்றுவதற்கான நிறுவனத்தின் முயற்சிகளையும்,கல்லூரியில் கற்றல் கற்பித்தல் சூழலில் தரத்தையும் அவர்கள் பாராட்டினார்கள் என தெரிவித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

-சீனி, போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts