
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி டிராக்டர் பேரணி நடைபெற்றது. டெல்லி விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பா.ஜ.க மோடி அரசு கொடுத்த வோக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த டிராக்டர் பேரணி நடைபெற்றது. ராமசாமிதாஸ பூங்கா முன்பிருந்து துவங்கிய இப்பேரணிக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பா.புவிராஜ் பேரணியை துவங்கி வைத்தார்.
https://youtu.be/8-IKw8dGXiY
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சிபிஐ மாவட்டச்செயலாளர் லெனின் குமார் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் சரவணமுத்து வேல் ஏஐசிசிடியூ சண்முகம் பெருமாள் எலுமிச்சை விவசாயிகள் சங்கம் பிரேம் குமார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட பொருளாளர் நம்பிராஜன் மாவட்ட நிர்வாகிகள் டி.சீனிவாசன், மணி, செல்வராஜ் , ராமசுப்பு ரவிந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.