குளச்சலில் ‘எல்லோருக்கும் எல்லாம்’ பொதுக்கூட்டம்!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகர தி.மு.க சார்பில் எல்லோருக்கும் எல்லாம் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் அண்ணாசிலை சந்திப்பு அருகில் நடந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்ச்சிக்கு
நகர செயலாளர் நாகூர்கான் தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் நசீர், நகர அவைத்தலைவர் பிரான்சிஸ் அமலதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கவில்லைமோடியின் ஆட்சி முடிய போகிறது. தி.மு.க வை யாரும் அழிக்க முடியாது. அ.தி.மு.க பிளவுப்பட்டு நிற்கிறது தமிழ்நாட்டில் எத்தனை முறை மோடி வந்தாலும் பா.ஜ.க
இங்கு காலூன்ற முடியாது மேலும் தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி அமோகமாக வெற்றி பெறும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது மோடியிசம். விலைவாசியை கட்டுப்படுத்துவது ஒன்றியரசின் கடமை. பெட்ரோல், டீசல், சமையல் கேஸ், பருப்பு விலையை குறைக்க ஒன்றியரசு முயலவில்லை. தி.மு.க. சமய வழிப்பாட்டிற்கு எதிரானது அல்ல என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மேயர் மகேஷ், மாவட்ட மீனவர் அணி தலைவர் ஆன்றனிராஜ் எஸ்.கே,
ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி சந்திரா உள்பட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்
கன்னியாகுமரி,
-இந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts