கோவில்பட்டியில் உழைக்கும் மகளிருக்கான விருது!!!

கோவில்பட்டி ஆசியாபார்ம்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடந்த சர்வதேச மகளிர் தின விழாவில் உழைக்கும் மகளிருக்கான விருதுகள் வழங்கப்பட்டது.

கோவில்பட்டி பகுதிகளில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படும் ஆட்டோ ஓட்டுநர் அங்கன்வாடி பணியாளர்,செவிலியர், காவல் துறை மற்றும் நிறுவனபணியாளர்கள் ஆகியோருக்கு உழைக்கும் மகளிருக்கான விருதுகள் ஆசியாபார்ம்ஸ் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவில்பட்டி ஆசியாபார்ம்ஸ் நிறுவன வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆசியாபார்ம்ஸ் பாபு தலைமை வகித்தார். காவல் உதவி ஆய்வாளர் கமலாதேவி, பூவலிங்கம் செட்டியார் தொடக்க பள்ளி மேனாள் தலைமை ஆசிரியை பத்மாபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறுவன பணியாளர் மெக்ஸி அனைவரையும் வரவேற்றார்.

கோவில்பட்டி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜுன் நிஷாபேகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உழைக்கும் மகளிர் காண விருதுகளை வழங்கி பேசினார்.

இதில் வழக்கறிஞர் ஜெய்ஸ்ரீகிறிஸ்டோபர் உள்பட 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். நிறுவன பணியாளர் சரண்யா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஆசியாபார்ம்ஸ் நிறுவனப் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts