கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் மாவட்ட இன இயக்குனர் மருத்துவர் ராஜசேகரன் அவர்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனையின் இறுதி பணிகளை ஆய்வு செய்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கின்ற பிரசவ வார்டு, புற நோயாளிகள் வார்டு, எமர்ஜென்சி வார்டு, ஐ சி யு வார்டுகளை முறையாக பராமரிக்கப்படுகின்றதா, நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை கொடுக்கப்படுகின்றதா, மேலும் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகின்றதா மருந்துகளின் காலாவதி தேதிகள் மற்றும் அனைத்து வார்டுகளின் கழிவறைகள், பைப் லைன்கள் முறையான தண்ணீர் வசதி கிடைக்கிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.
புதியதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை உள்ளே நவீன சமையலறை மற்றும் அதற்கான உபகரணங்கள் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்த உணவு கூடம் மற்றும் அனைத்து அறைகளிலும் முழுமையாக சிகிச்சைக்கு வரும் சாமானிய மக்களுக்கு பயன்பாட்டுக்கு உள்ளதா என்பதையும் ஆய்வு மேற்கொண்டார் மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் , சரியான நேரத்தில் பணிக்கு வருகிறார்களா என்பதையும் ஆய்வு செய்தார் இன்னும் மருத்துவமனைக்கு தேவையான கட்டிடங்கள் தேவையான உபகரணங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நேரடியாக இப்பகுதி மக்கள் படும் கஷ்டங்களை எடுத்துக் கூறி வாங்கித் தருகிறேன் என்று கூறினார்.
மாவட்ட இணை இயக்குனர் வால்பாறையில் இருக்கக்கூடிய பொதுமக்களின் நலனில் பெரும் அக்கறை கொண்டு இன்னும் சில நாட்களில் அனைத்து வசதிகளோடு புதிய மருத்துவமனை கட்டிடத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் உருவாக்க கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் மாவட்ட இணை இயக்குனர் மருத்துவர் திரு ராஜசேகரன் அவர்களை தமிழக வணிகர் சம்மேளனம் வால்பாறையின் பொது மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
வால்பாறை,
-P.பரமசிவம்.