விளாத்திகுளத்தில் கூலித் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த காந்தி சுப்பிரமணியன் என்பவரின் மகன் சண்முகராஜ் (42), இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் விளாத்திகுளம் வேம்பார் சாலையில் உள்ள அரசு மதுபான கடை அருகே சாலை ஓரம் முற்புதரில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

இதனை அடுத்து தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார், சண்முகராஜின் உடலை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சண்முகராஜுக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திக்காக,

விளாத்திகுளம் செய்தியாளர்,
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts