Trending

கோவையில் திறக்கப்பட்ட புதிய பாலத்தில் என்ன சிக்கல்?கோட்டப்பொறியாளர் சொல்வது என்ன…?

கோவை: பாலக்காடு சாலை, பொள்ளாச்சி சாலை போன்றவற்றை இணைக்கும் முக்கிய சந்திப்பான உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் அமைக்க மக்களிடையே நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது. கிட்டதட்ட அரைமணி நேரம் செல்ல வேண்டிய போக்குவரத்து இந்த பாலம் அமைத்த பிறகு 5 முதல் 7 நிமிடங்களில் செல்லலாம் என்று கூறப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை மாவட்டத்தில் உக்கடம் மேம்பாலம் கடந்த மாதம் 9-ந் தேதி தமிழக முதலமைச்சரலால் திறந்து வைக்கப்பட்டது. திறக்கப்பட்ட நாள் முதல் ஒரு வாரம் வரை இந்த பாலத்தில் மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் எளிதாக சென்று விடலாம் என்று கூறப்பட்டு வந்தது.
தற்போது பல்வேறு விதமான சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மேம்பாலத்தில் 4 இறங்குதளங்கள் உள்ளன. உக்கடம், பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலைகளில் இறங்குதளங்கள் இருந்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் சுங்கம் பகுதியில் ஒரு இறங்கு தளம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த 3 இறங்குதளங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் இந்த பகுதியில் சாலைகளில் குறுகலாக இருப்பதாக கூறப்படுகிறது. சற்று தடுமாறினாலும் மேலே இருந்து கீழே விழுந்து விடுவோம் என்று பயம் இருப்பதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதுமட்டுமல்லாமல் தொடர்ந்து வேகத்தடைகள் அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் மக்கள் அனைவரும் வேகமாகவும் செல்ல முடியாமல் திணறி வருகின்றனர். திறந்து வைக்கப்பட்டு சிறிது நாட்களே ஆன நிலையில் மக்கள் இந்த மேம்பாலத்தை பயன்படுத்த அச்சப்படுகின்றனர்.

இந்நிலையில் இந்த பிரச்சனை தொடர்பாக கோட்டப்பொறியாளர் கூறியதாவது:-
பாலத்தில் வேகத்தடைகள் ஏதும் வைக்கவில்லை
15 நாட்களுக்கு மேலாக இந்த பாலத்தில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. புதிதாக இதில் செல்வதால் மக்களுக்கு அப்படி தோன்றி இருக்கலாம். இந்த பாலத்தில் வேகத்தடைகள் ஏதும் வைக்கவில்லை. அதாவது வேகத்தை குறைப்பதற்கு தான் இது போன்ற ரம்பிள் ஸ்டிர்ப்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலைகள் அனைத்தும் வளைவுகளும் சாதாரண வளைவுகள் தான். ஆபத்தை விளைவிக்கும் வளைவுகள் அல்ல. இந்த மேம்பாலத்தில் 30 கிமீ வேகத்தில் தான் செல்ல வேண்டும். அதற்காக தான் இந்த வேகத்தை குறைக்கும் தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தில் சென்றால் எந்த ஒரு பிரச்சனையும் வராது.
இவ்வாறு அவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts