கோவை மாவட்டம் இக்கரை போலுவம்பட்டி ஊராட்சியில் “தாமரை மகளிர் சுய உதவி குழு” என்கிற மகளிர் சுய உதவிக் குழுவினை அக்குழுவின் தலைவியான
ரா. வித்யாஸ்ரீ அவர்கள் 12 உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டு துவக்கி உள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமாக ஊராட்சி கூட்டமைப்பின் கீழ் 17 வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தாமரை மகளிர் சுய உதவி குழுவில் உள்ள அனைவரும் இணைந்து 19-08-2024 (திங்கள் கிழமை) அன்று பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நோட் புக், பேனா, பென்சில்களை வழங்கினர். மேலும் ஊனமுற்ற நபர்கள் ஆறு பேருக்கு ஒரு சிப்பம் (30 Kg) அரிசியை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் தாமரை மகளிர் சுய உதவி குழுவில் உள்ள அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு(PLF) கணக்காளர் அமுதவல்லி அவர்களும் கலந்து கொண்டார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-செந்தில்.