கீழக்கரந்தை ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஊராட்சி ஒன்றியம்,கீழக்கரந்தை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் துவக்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தினை வழங்கி உரையாற்றினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உடன் நாகலாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் ரவீந்திரன், மாவட்ட சுகாதார அலுவலர் அவர்களின் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் மருதம்ப்ரைட்டன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், கீழக்கரந்தை ஊராட்சி மன்ற தலைவர் சுப்புதாய், கீழக்கரந்தை காலனி கிளைச் செயலாளர் ராமகிருஷ்ணன், கீழக்கரந்தை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் பால்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts