அரசியல் கட்சிகளின் அத்துமீறலால் பொதுமக்களுக்கு இடையூறு!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு அமைச்சர்கள் வரும்போது வால்பாறை காந்தி சிலை பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு மேடை அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அண்ணா சிலை பகுதியில் இடம் இருந்தாலும்
அதை பயன்படுத்தாமல் குறுகிய இடத்தில் காந்தி சிலை பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டத்தை நடத்துவதால் பேருந்துகளை இயக்க விடாமல் தடுப்பதோடு வயதான முதியோர், கைக்குழந்தையுடன் வரும் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் என அனைவரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர் குறிப்பாக அரசு மேல்நிலைப் பள்ளி அருகே ஒலிபெருக்கி வைத்து பொதுக்கூட்டம் நடத்துவதால் பள்ளி மாணவ மாணவியருக்கு இடையூறு ஏற்படுகிறது. இதையெல்லாம் ஆளும் கட்சிக்காரர்களும், அரசு அதிகாரிகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அதேசமயம் திமுக அதிமுக உள்ளிட்ட இரண்டு கட்சிக்காரர்களும் ஆட்சியில் இல்லாத போது குறை கூறுவார்கள் என்று பொதுமக்கள் புலம்புகிறார்கள்.

மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும் காலங்களில் இப்பகுதியில் பொது கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்பதே இப்பகுதி பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-P. பரமசிவம், வால்பாறை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts