விபத்தை ஏற்படுத்தும் பள்ளம் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!!

கோவை மாவட்டம் குனியமுத்தூர் மெயின்ரோடு எச்டிஎப்சி பேங்க் அருகே உள்ள குழி விபத்துகளை
ஏற்படுத்தி வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

குனியமுத்தூர் TO பாலக்காடு வரை செல்லக்கூடிய இந்த சாலையானது தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பேருந்துகள். கனரக வாகனங்கள். மற்றும் நான்கு சக்கர இருசக்கர வாகனங்கள் பயணிக்கின்றது. போக்குவரத்து நெருக்கடியான இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

இருப்பினும், அங்குள்ள எச்டிஎப்சி பேங்க் அருகே உள்ள சாலையின் ஓரத்தில் குழி ஒன்று உள்ளது. இதில் பெண்கள்,முதியவர்கள் என இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது இந்த குழியில் விழுந்து விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இன்று காலை 10 மணி அளவில் பெண் ஒருவர். இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். திடீரென அந்த பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அந்தப் பெண்ணை தூக்கி விட்டனர். இருப்பினும் கை, கால்களில் அடிபட்டதாக கூறுகின்றனர்.

இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி அந்த பகுதியில் நடப்பதாலும் உயிர்ச்சேதம் ஏற்படுவதற்குள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்டு அந்த சாலையை சரி செய்து தர வேண்டும் என்று வாகன ஓட்டிகளும்,பொதுமக்களும். கோரிக்கை வைக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-தலைமை நிருபர் ஈசா,

ஜியாவுதீன்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts