கோவை மாநகர காவல் ஆணையர் அவர்கள், கோடை காலத்தின் வருகையை முன்னிட்டு, போக்குவரத்து காவல்துறையினருக்கு சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, அவர்களின் நலனை கருத்தில் கொண்டு, இன்று புதன்கிழமை (19.03.2025) நீர் மோரும் மற்றும் சோலார் தொப்பியும் வழங்கி உள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்வு இன்று காலை 10.00 மணிக்கு கோவை, அவினாசி சாலையில் அமைந்துள்ள அண்ணா சிலை அருகே நடைபெற்றது கோடை காலத்தின் கடுமையான வெப்பத்தால், காவலர்கள் தொடர்ந்து பணியில் இருப்பது கடினமானது என்பதைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தண்ணீர் மற்றும் சோலார் தொப்பி வழங்கப்படுவதன் மூலம், வெப்பத்திலிருந்து தற்காத்து, உடல் சோர்வை குறைக்கும் வகையில் இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன.
இந்நிகழ்வில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் நேரில் பங்கேற்று, காவல்துறையினருக்கு தேவையான வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார். இது போக்குவரத்து காவலர்களின் உடல் நலத்திற்கும் பணித் திறமைக்கும் உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-MMH.