டீக்கடையில் விலை அதிகரிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிக வசூல்!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகாமையில் உள்ள கீதா பேக்கரி, அரசு பேருந்து நிறுத்தும் இடமல்ல. இருந்தும் அந்த இடத்தில் தான் பயணிகள் டீ குடிப்பதற்காக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பேருந்தை நிறுத்துகிறார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அந்த டீ கடையில் விலைகள் கொஞ்சம் அதிகமாகத்தான் வாங்குகிறார்கள். ஒரு டீ 20 ரூபாய் ஒரு காபி 25 ரூபாய், தண்ணீர் பாட்டிலை ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. உரிமையாளரிடம் கேட்டப் பொழுது தகாத முறையில் பதில் அளிக்கிறார்கள். பெட்டிக்கடையில் ஒரு லிட்டர் தண்ணீர் 20 ரூபாய்க்கு தான் விற்கப்படுகிறது.

அரசு பேருந்தில் பயணிக்கும் சாதாரண தினசரி தொழிலாளிகளுக்கு இது அதிக வசூலாக தெரிகிறது. அதிக வசூலை நாடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு பேருந்து இது போன்ற கடைகளில்  நிறுத்தாமல் அரசாங்கத்துக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள். அதிக வசூல் செய்பவர்களை உடனே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறார்கள் பொதுமக்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts