கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறையில் அம்மா படகை இல்லம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. மேலும் அதே பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் பல கோடி ரூபாய் செலவில் பல ஆண்டுகளாக வேலை நடைபெற்று வருகின்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதன் அருகே தான் குப்பை கொட்டும் இடமும் இருக்கின்றது. எனவே அப்பகுதி குப்பை கூளங்கள் நிரம்பி மலை போல் காட்சியளிக்கின்றது. குப்பை கொட்டுவதினால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றமும் வீசுகின்றது.
இச்சூழலையில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தாலும் கழிவுநீர் எப்படியும் படகு இல்லத்தில் கலக்கும் என்பது பொதுமக்களின் கவலையாகவே இருக்கின்றது. மேலும் இப்பகுதியின் அருகிலேயே அரசு கலைக் கல்லூரி, நீதிமன்ற வளாகம், மற்றும் நகராட்சி தங்கும் விடுதி ஓய்வறையும் அமைந்துள்ளது.
எனவே இப்பகுதி, பொதுமக்களின் பயன்பாட்டில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. வரும் கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் வரவு அதிகமாகும் என்பதால் இந்த சூழ்நிலைகள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணங்களில் இயற்கை எழில் மிகு வால்பாறையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் என்பது பொதுமக்களின் கவலையாக மாறி உள்ளது.
இவற்றை மனதில் கொண்டு நகராட்சி நிர்வாக அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-திவ்யக்குமார்.