அருள் தரும் ஸ்ரீ ஒன்னுக்கை ராம தேவி ஸமேத அட்டிய தொட்டராயர் சுவாமி ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக கோலாகலம்!!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் கீழக்கல்லுரணி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஒன்னுக்கை ராம தேவி ஸமேத அட்டிய தொட்டராயர் சுவாமி ஆலய கும்பாபிஷேக விழாவை ஜோதிட ரத்னா ஸ்ரீ. ப்ரசன்னா சாம்ராட் கேசவன் விஷ்ணு அர்ச்சகர் அவர்கள், ஸ்ரீ . ரமேஷ் அய்யங்கார் அர்ச்சகர் அவர்கள் தலைமையில் வெகு விமர்சையாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஸ்ரீ ஒன்னம்மாள் தொட்டராயர் சுவாமி திருக்கோவிலில் யாகசாலை பூஜை செய்யப்பட்டது. மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் கோவில் உட்புறம் சுற்றி வந்து சுமார்9.30.மணிக்கு மேலாக கோபுரத்திற்கு தண்ணீர் ஊற்றப்பட்டது. இந்தக் கோவிலில் சிறப்பு அம்சங்கள் என்னவென்றால் திருமணம் ஆகாதவர்களுக்கு அம்பாலை வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது ஐக்கியம்.இந்த விழாவில் வான வேடிக்கையுடன் மேளதாளம் முழங்க சுவாமி அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பக்த கோடிகள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரண்டு நாட்கள் அன்னதானம் நடைபெற்றது. கிராம பொது மக்கள் மற்றும் இளைஞர் அணியினர் ஏற்பாடு செய்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts