கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை சுற்றுலா தளமாக இருப்பதால் கோடை காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். சுற்றுலா பயணிகளின் வருகையால் வால்பாறையே திருவிழா கோலம் போல் காட்சி அளிக்கும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இக்காலங்களில் சுற்றுலா வாகனங்கள் வைத்திருக்கும் ஓட்டுனர்களுக்கு ஒரு வசந்த காலம் ஆகும். ஆனால் டிரைவர்கள் தங்களை நம்பி வரும் பயணிகளின் நலன் கருதாமல் போட்டி போட்டுக் கொண்டு குறுகிய சாலைகளில் வண்டியை வேகமாக ஓட்டியும் ஒருவரை ஒருவர் முந்தி செல்வதும் பார்ப்பவர்களையும் உள்ளே உள்ள பயணிகளையும் பயம் கொள்ள செய்கிறது.
இருநாட்களுக்குமுன் காரும் ஒரு வேனும் அவ்வாறு ஒன்றே ஒன்று முந்தி செல்ல போட்டி போட்டு செல்லும்போது கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து அருகாமையில் உள்ள தேயிலை தோட்டத்தில் புகுந்தது. இதனால் வானத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
அதே நேரத்தில் கார் தோட்டத்தில் செல்லாமல் பக்கத்தில் உள்ள சரிவுகளில் சென்றால் ஓட்டுனரை உயிருடன் பார்ப்பது சிரமம். எனவே இதுபோல் வாகனங்களை ஓட்டுபவர்களை காவல்துறை கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-திவ்யக்குமார்.